Saturday, 27 June 2020

தமிழ் கவிதைகள்

களவாணியின் கண் சிமிட்டலில் 
களவு போனேன் நான்.

அமாவாசை அன்றும் நிலா சோறு எனக்கு 
தேனே உன் முகம் பார்த்து !

தமிழக பெண்களை மீண்டும் பாவாடை தாவணிகளில் 
காண ஆவலாக உள்ளேன் 

ஏய் ! டைரி நீயும் என் நண்பன் போல 
ஏன் என்றால் என் சுக துக்கங்களை 
உன்னிடம் பகிர்ந்து கொள்கிறேனே !

எருமையல்ல நான் அடைமழைபோல் வசை  மொழியில் நனைந்து  திளைக்க.
கவரிமான் மயிரிழை உதிர்வது போல் வசைமொழி உதிர்ந்தால் உயிர்துறப்பேன்.

ஏக்கங்கள் ஆயிரம்

        
                 ஒரு நாள் மாலைப் பொழுது மணி,  வீட்டிற்கு  செல்வதற்காக இரயில்வே நிலையத்தில் காத்துக்கொண்டு  இருந்தான். ஏனெனில்  அவன் வெளியூரில்  தங்கி  மேலாண்மை (MBA Humanresource)  பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தான். மேலும்  அவன் உளவியல் பட்டப்படிப்பு முடித்தவன். சொந்த ஊருக்கு செல்வதற்காக காத்திருந்த அவனுக்கு அருகில் ஒரு இளம்பெண் வந்து  நின்றாள். இவன் அவளை உற்று நோக்கினான். அவள் ஏதோ சோகத்தில் இருப்பது போல் இவனுக்கு தோன்றியது.


               சிறிது நேரத்தில் இரயில் வந்தது. இருவரும் ஒரே கம்பார்ட்மெண்டில் ஏறினர். இரவு நேரம் என்பதால் அருகில்  இருந்த  அனைவரும் உறங்கினர்.  ஆனால்  அவள் மட்டும் உறங்கவில்லை . ஏதோ சோகத்துடன் யோசித்துக் கொண்டிருந்தான். மணி அவளை ஓரக்கண்ணால் நோட்டம் விட்டு கொண்டிருந்தான் . சிறிது நேரத்திற்கு பிறகு அவள் எழுந்து படிக்கட்டு அருகில் சென்றாள் .
அவனும் பின் தொடர்ந்தான். திடீரென்று அவன் அதிர்ச்சி அடைந்தான்.


           ஏனென்றால் அவள் தற்கொலைக்கு முயற்சி செய்தாள். பின்பு அவளை அவன் தடுத்து நிறுத்தினான். பின்பு என்ன  கேட்டான் யோசிங்க.. யோசிங்க.. ஏன்  தற்கொலைக்கு முயற்சித்தாய் என்று கேட்டுருப்பான் என்று  தானே நினைக்கிறீங்க அதான் இல்லை. உரையாடல் இதோ .

மணி :   என்ன பண்ற 

அவள் : உன் கிட்ட அவசியம் சொல்லணுமா யாருடா நீ ?

மணி :  சாவப்போறியா ?

அவள் : பார்த்தா தெரியலையா?

மணி :   சவாப் போற உனக்கு எதுக்கு கழுத்துல செயின் காதுல                                தோடு லாம் ?

அவள் : திருடனா நீ ?

மணி :  இல்லை வீணாபோய்டுமேன்னு தான் .

அவள்: (கழற்றினாள்) இந்தா வச்சிக்கோ.

மணி :  செல்போன் வச்சிருக்கியா ?

அவள்: ஏன் அதுவும் வேணுமா ?

மணி :  அத  சொல்லித்தான் புரியணுமா ?

அவள் : இந்தா (சாவ போற எனக்கு எதுக்கு அது)

மணி : உன் பேக் எங்க இருக்கு?

அவள்: என்ன நிம்மதியா சாக கூட விடமாட்டியா ?

மணி  :  சாவ போற உனக்கு எதுக்கு அது அதான்.

அவள்:  அந்த சிவப்பு நிற பேக் என்னது தான்.

மணி :  ஓகே 

அவள்:  இவ்வளோ கேக்குற நான் ஏன் சாவப் போறேன்னு கேட்டியா?

மணி :   அது எதுக்கு எனக்கு சரி ஆசைப் படுற சொல்லு 

அவள் :  எங்க அப்பாவும் அம்மாவும் வெளிநாட்டுல இருக்காங்க                               நான் இங்க என் பாட்டி வீட்டுல இருக்கேன்.என்ன வந்து                                 பாக்குறது கூட இல்ல. பணத்த  மட்டும் அனுப்புறாங்க                                   யாருக்கு வேணும் பணம் .

மணி :   இதோ பார் . ஆண்டவன் யாருக்கும் எல்லாத்தையும்                                        கொடுக்குறது இல்ல. இப்ப பார் எனக்கு  பாசமுள்ள  அப்பா                        அம்மா வ  கொடுத்துட்டு பணத்த கொடுக்கல 
                 என் கிட்ட பாசம் இருக்கு  உன்கிட்ட பணம் இருக்கு ஷேர்                              பண்ணிக்கலாம் . உனக்கு எப்போ சோகம் வருதோ அப்ப                            கால் பண்ணு நான் பாசம் தரேன் . எனக்கு பணம் 
                 தேவைப்படும் போது உனக்கு கால் பண்றேன்.

அவள் : ஏன்  என் சொத்தை  எழுதி வாங்கிறதுக்காக வா (                                                கருப்புசாமி   குத்தகைதாரர் ஸ்டைல்ல)

மணி : ஏன்பா என்ன அப்டி நெனச்சிட்டு நான் அப்படிப்பட்ட ஆளு                             இல்லப்பா .(பருத்திவீரன் ஸ்டைல்ல)

அவள் :  நல்லா  பேசுற  என்ன பண்ற 

மணி :  BSC Psycholagy MBA Human Resource பண்ணிட்டுருக்கேன் 

அவள் : சரி நான் இறங்குற ஸ்டேஷன் வந்துருச்சி  நான் வீட்டுக்கு                           போறேன்.

மணி: ம்ம் நல்ல பொண்ணு  இந்த உன்னோட பொருள்லாம் 

அவள் :  ம்ம் ஓகே  bye

மணி  ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்றிய மகிழ்ச்சியுடன் பயணத்தை தொடர்ந்தான்.





Thursday, 25 June 2020

மெய்யான அழுக்கு

        நவீன் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தான். அவனுக்கு அது PROJECT DELIVERY TIME என்பதால் அவ‍ன் பரபரப்பாக காணப்பட்டான். அவன் தங்கியிருக்கும் விடுதிக்கு அருகில் ஒரு வெளிமாநில குடும்பம் வந்து தங்கியிருந்தது. அவன் மிகுந்த வேலை காரணமாக அவ‍ர்களை கவனித்ததே இல்லை. எப்போதும் காதில் HEADSET போட்டுக் கொண்டு செல்வது அவனது பழக்கம். அதும் அவனுக்கு பணக்காரர்களை கண்டால் பிடிக்காது. அவர்கள் ஏழைகளை மதிக்க மாட்டார்கள். ஏளனமாக பார்ப்பார்கள் கேலி செய்வார்கள் மனதைப் புண்படுத்துவார்கள் வேதனைகளை புரிந்து கொள்ள மாட்டார்கள் எண்ணம், ஆனால் அதை எப்போதும் வெளிக் காட்டிக்கொள்வதில்லை. நாட்கள் கடந்தன. PROJECT DELIVERY யும் முடிந்தது. ஒருநாள் தற்செயலாக அந்த குடும்பத்தை பார்த்தான். அவர்கள்வெளிமாநிலத்திலிருந்து இங்கே பொம்மை விற்றுக்கொண்டிருந்தனர். 

        நவீன் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். அந்த குடும்பத்தில் இரண்டு சின்ன ஆண்குழந்தைகள் இருந்தது. அதில் இளையமகன் மண்ணில் உருண்டு பிரண்டு உட்கார்ந்துகொண்டிருந்தான். அவனை பார்த்த நவீன் அருவருப்பு அடைந்தான் அவன் முகத்தை சுளித்த வண்ணம் அலுவலகத்தை அன்று சென்றடைந்தான். நாட்கள் சென்றன, அன்று அவனுக்கு விடுமுறை ஆதலால் வெளியில் எங்கும் செல்லவில்லை. அதனால் அவனுக்கு சரியாக பொழுது போகவில்லை உடன் இருக்கும் நண்பர்களும் கும்பகர்ணன் போல் உறங்கி கொண்டிருந்தனர். உடனே அவன் எழுந்து சென்று டீ குடிக் புறப்பட்டான். அருகில் இருந்த ஐஸ்வர்யா பேக்கரியில் ஒரு 7 ரூபாய் கொடுத்து டீ குடித்துவிட்டு மீண்டும் புறப்பட்டான். ஆனால் அவனுக்கு திரும்ப உடனே தனது அறைக்கு வர விருப்பம் இல்லை.உடனே அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடையில் உட்காந்து கொண்டுபோக வர இருக்கும் பேருந்துகளை நோட்டம் விட்டு கொண்டிருந்தான். 

அப்போது அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவன் பொம்மை விற்றுக் கொண்டிருப்பதையும் கண்டான். பின்பு அந்த குழந்தை ரோட்டில் விளையாடி கொண்டிருப்பதையும் கண்டான். அவனுக்கு மீண்டும் அருவருப்பாக தோன்றியது.

   அப்போது அங்கு ஒரு கார் வந்து நின்று, அதிலிருந்து ஒரு கறுப்பு மனிதர் அந்த குழந்தையை பார்த்து சிரித்து அவனை கிள்ளி முத்தமிட்டார். பின்பு இரண்டு பொம்மைகளை
வாங்கிக்கொண்டு பார்த்து விளையாடுப்பா என்று கூறிச்சென்றார். இதைப் பார்த்த நவீனுக்கு "சுளீர்" என்ற வலி மனதில் தோன்றியது, ஊரில் உள்ள அனைவரையும் குறை கூறிய அவன் மனதிலும் அந்த பணஅதிகார அரக்கன் இடம் பெற்றதை எண்ணி வருந்தினான் மனிதநேயம் இன்னும் சாகவில்லை என்று கூறிக்கொண்டே அந்த குழந்தையை நோக்கிப் புறப்பட்டான் கையில் இனிப்புடன்,









Monday, 23 February 2015

நான் பாக்கியசாலி.

வினோத் நகரத்திற்கு செல்வது அதுவே முதல் முறை. அவனது மாமா  வைத்திருக்கும். ஆட்டோ மொபைல்ஸ் கடைக்கு உதிரி பாகங்கள் வாங்க சென்னைக்கு வந்திருந்தான். அங்கு ரிச் ஸ்ட்ரீட்டில் கடைக்கான உதிரி பாகங்களை  வாங்கி  ஒரு பார்சல் சர்வீஸில் ஊருக்கு  அனுப்பி வைத்தான். பின்னர் சென்னையை சுற்றி பார்த்து விட்டு செல்லலாம்.என்று முடிவெடுத்தான். சரி என்று அவன் ஸ்பென்செர்ஸ் சென்றான். அங்கு ஒரு ஜீன்ஸ் பேண்ட் , டி சர்ட் அணிந்த தாய்  தன் கணவருடன் வந்திருந்தாள்.
அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை சுமார் 2 வயது இருக்கும். அவனும் நடந்து வந்ததது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது..அவன்  காலில் ஷி  அண்ட் கூலிங் கிளாஸ் என்று படு ஆடம்பரமாக வந்திருந்தான். அவனால் சரியாக நடக்க கூட தெரியவில்லை.ஆனால் அவனை வலுகட்டயமாக நடத்தி இழுத்து வந்தாள் அந்த தாய். அவள் ஜீன்ஸ் அணிந்திருந்ததலோ என்னமோ அவனை தூக்கி இடுப்பில் வைக்க வெட்கபட்டிருகிறாள்  போலும்.   இதை பார்த்த வினோத்க்கு தன்னை பத்து மாதம் வயிற்றில்  சுமந்ததோடு 5  வருடம்  இடுப்பில் சுமந்த தன்  தாயை எண்ணிக் கொண்டான். 5 வயது வரை  தாயின் இடுப்பில் வலம் வந்த நாளை எண்ணிக்கொண்டே "நான் பாக்கியசாலி." "எதிர் கால குழந்தைகள்" பாவம் என்றான்.

Thursday, 4 December 2014

பாட்டி வைத்தியம்

1. இஞ்சி எலுமிச்சை சாற்றை தண்ணிரில் கலந்து காலையில் அருந்த குணமாகும். எலுமிச்சை சாறைத் தினமும் பருகி வந்தால் காலரா அண்டாது.
2. சாப்பிடும் முன் இளநீர் அருந்தினால் பசிக்காது. சாப்பிட்டபின் அருந்தினால் பித்தம் நீங்கும் மலச்சிக்கல் தீரும். நாள் பட்ட இளநீரை குடித்தால் சளி ஏற்படும்.
3. வயிற்றுவலியா? ஒரு டம்ளர் கொதிநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேனைக் கலந்து குடித்தால் 1/4 மணி நேரத்தில் வலி பறந்துவிடும்.
4. காய்ச்சிய பசும்பாலில் மஞ்சள், மிளகுப் பொடி பனங்கற்கண்டு சேர்த்து இரவில் அருந்தினால் இருமல் குணமாகும். கற்கண்டுடன் ஜீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் குணம் தெரியும்.
5. உடல் அசதியா? முருங்கை இலை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் குணமாகும்.
6. காலையில் இருமல் வந்தால் கடுகை பட்டுப்போல் கரைத்து தேனில் 1 சிட்டிகை கலந்து 2 வேளை சாப்பிட குணமாகும்.
7.மறதி தொல்லையா? ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.
8. இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.
9. சளித் தொல்லையா? வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும்.
10. கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும்.
11.தொண்டை கட்டிக்கொண்டு குரல் எழாமல் சிரமப்படுபவர்கள் கற்பூர வல்லியை சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருக சரியாகும்.
12. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக் கரண்டி சாப்பிட, வயிற்றின் சுற்றளவு குறையும்.
13. மிளகாயுடன் பத்து துளசி இலைகளை சேர்த்து சாப்பிட சளி போகும்.
14. சுக்கை நீர் விட்டு அரைத்து கொதிக்கவைத்து மூட்டுகளில் தவ மூட்டுவலி குறையும்.
15. துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரை டம்ளர் எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட பூச்சிகள் வெளியேறும்.
16. கருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இரு முறை உணவுடன் சேர்த்து சாப்பிட மூலம் தீரும்.

Wednesday, 19 November 2014

என் எண்ண துளிகள்

 அதிக பணம் படைத்தவன் மகிழ்ச்சியாக இருக்கிறான்
 என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியாது.

எவன் செய்த பாவமோ என்னை துரத்துகிறது.

ஆயிரம் முறை முயன்று தோற்றவனை நான் மதிக்கிறேன்.
முதல் முறை அதிஷ்டதால் வென்றவனை நான் மதிப்பதில்லை.

எனது ஆசைகளை எழுதுனேன் டைரி முடிந்தது.
அதை அடைய விரும்பினேன் வாழ்க்கை  முடிந்தது.

சிற்பிக்குள் முத்து உன் தாய் வயிற்றில் நீ
வித்தியாசம் தெரியவில்லை எனக்கு.

கவலை படுபவன் நாத்திகன்.

அன்பு ஆனாலும் வம்பு ஆனாலும் எனக்கு கொடுத்ததை விட அதிகம் கொடுத்தே பழக்கம்.

என்னுடைய பிறவி குணம் மாற தொடங்கிற்று.

என்னுடைய நாட்கள் எண்ணபடுகின்றன .

ஒரு மேல் அதிகாரி அதிகம் பேசாமல்
அதிகம் உறவாடாமல் இருப்பதே
நம்மை அடக்கும் செயல் தான்.

நான் ஒரு ஊமை பெண்ணை மணக்க விரும்புகிறேன்
அவளின் உதடுகளை விட கண்கள் அதிகமாக பேசும்.




6000 ரூபாய்

 இளம்பரிதி ஏழை குடும்பத்தை சேர்ந்த இளைஞன். இளமையில் வறுமையின் பிடியில் சிக்கி துன்பப்பட்டுக் கொண்டிருந்தான். கடவுளின் அருளால் பெற்ற அறிவையும் அரசிடம் இருந்து பெற்ற நிதியுதவியும்  கொண்டு பொறியியல் தேறினான். இருப்பினும்  வறுமை அவனை விடாமல் துரத்தியது. நெடுநாள் வேலை கிடைக்கவில்லை வருந்தினான். வெம்பினான்  தவித்தான் இறுதியில் அவனுக்கு ஒரு தனியார் கம்பனியில் குறைந்த ஊதியத்தில் வேலை கிடைத்தது. முதல் நாள் கம்பனியில் கால்  வைத்த நாளே அவனுக்கு கண்டத்தை அதிர்ச்சி காத்திருந்தது. அந்த கம்பனியில் நாகரிகம் என்னும் பெயரில் ஆண்களும் பெண்களும் நடந்து கொண்டது அவனுக்கு பிடிக்கவில்லை.இருப்பினும் அவனின் வறுமை நிலையை நினைத்து நாட்களை ஓட்டினான்.

            ஒரு நாள் வீட்டிற்கு செல்வதற்காக ரயில் நிலையத்தில் காத்திருந்தான்.
அப்போது அவனுடன் கல்லூரியில் ஒன்றாக படித்த பெண் சிந்தியாவை கண்டான். சிந்தியா அழகானவள் அதே சமயம் பயங்கர திமிர் பிடித்தவள்.சிந்தியா கல்லூரியில் இளம்பரிதியை மதித்ததே இல்லை. இப்போது மட்டும் மதிக்கவ போகிறாள் என்று எண்ணி கொண்டே அருகில் சென்றான். எப்படி இருக்கிறாய் என்று விசாரித்தான். அவள் ஏதோ அசிங்கத்தை  கண்டதை போல தலையை திருப்பி கொண்டாள். ம்
 இவனுகெல்லாம்  கிடைக்கும் போது எனக்கு கிடைக்காதா ? வந்துட்டான் விசாரிக்க என்று பொரிந்து தள்ளினாள். இதை கண்டு இளம்பருதி வருத்தம் கொள்ளவில்லை எதிர்பார்த்தது தானே. இருவரும் ரயிலில் ஏறினர். ரயிலில் சரியான இட நெருக்கடி.

பயணி: தம்பி இறங்க போறியாப்பா?
இளம்பரிதி: இல்லங்க (அடுத்த ஸ்டேஷன் வர இன்னும் 10 நிமிடம் ஆகுமே? என்று எண்ணிக் கொண்டே).

பயணி: கொஞ்சம் நகருப்பா போகணும்.
இளம்பரிதி: என்ன சார் குதிக்க போறிங்களா ? என்றான் கடுப்பாக .

ரயிலில் சிரிப்பொலி , அவர் முகத்தில் கோபம் சரி விடுங்க பாஸ் என்று அருகில் இருந்தவர் சொல்ல அவர் சாந்தமனார்.

அந்த ரயில் சென்னையிலிருந்து திருச்செந்தூர் வரை செல்லும் விரைவு வண்டி. இளம்பரிதி சிதம்பரத்தை சேர்த்தவன். சிந்தியா தஞ்சையை சேர்ந்தவள். வண்டி மாம்பலத்தை தாண்டியவுடன் உட்கார சிறிது இடம் கிடைத்தது இளம்பரிதிக்கு. சிந்தியா நின்று கொண்டே வந்தாள். உட்கார இடம் கிடைத்தவுடன் இளம்பரிதி ஒரு குட்டி தூக்கம் போட்டான்.  வண்டி தாம்பரத்திற்கு வந்தது. இருவர் தாம்பரம் வந்துவிட்டது என்று பேசி கொண்டிருந்தனர். அரை தூக்கத்தில் இருந்த இளம்பரிதிக்கு சிதம்பரம் என்று காதில் விழுந்தது. உடனே விழித்து கொண்டு பேக்கை எடுத்தான் சிந்தியாவின் ஷால் அவனது பேக்கின் மீது விழுந்திருப்பதை காணாமல். அவளுடைய ஷால் அவனுடைய கையோடு வந்துவிட்டது. அப்போது சிந்தியா கடுமையாக முறைத்தாள். நம்ம ஆள் பம்மிக்கொண்டே  ஷாலை கொடுத்துவிட்டு வந்து தன் தொழிலை தொடர்ந்தான். ரயிலே உறங்கியதை பார்த்து சிந்தியாவும் உறங்கினாள். நள்ளிரவில் அப்படியொரு பயங்கர சத்தம்.

அது இதுவரை உணராத பயங்கர சத்தம் என்பதை உணர்வதற்குள் அந்த விபத்து  ஏற்பட்டது. நிறைய பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது,  அதிஷ்டவசமாக இளம்பரிதி ஓரிரு  காயங்களுடன் உயிர் தப்பினான்.  இரயில் முழுக்க அலறல், இரத்த வெள்ளம் , துண்டான தலைகள், கைகள், கால்கள் சதை துணுக்குகள். என அலங்கோலமாக இருந்தது. கை  ஏற்பட்டது இளம்பரிதிக்கு. இருப்பினும் சுதாரித்து  கொண்டு சிந்தியவை தேடினான். பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் அவள் இருந்தாள் . அவளை தூக்கிக் கொண்டு வந்து வெளியே வருவதற்குள் இரயில் மருத்துவ வாகனங்கள் வந்தன. அரை மயக்கத்தில் இருந்த அவள் கண் விழித்து  பார்த்தாள் . தான்  இளம்பரிதி கைகளில் இருப்பதாய் உணர்ந்தாள் . அவளை கொண்டு போய் வாகனங்களில் சேர்த்து விட்டு மீண்டும் சென்று ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவினான் .சிலரை மீட்டு  வாகனங்களில்  சேர்த்து சேர்த்து  மருத்துவமனைக்கு  விரைந்தான். அங்கே மருத்துவர்கள் சிலர் வெளியே நின்று கொண்டு சிந்தியாவை பற்றி விசாரித்து கொண்டிருந்தனர் .அப்போது அங்கு வந்த இளம்பரிதி என்ன நடந்தது என்று வினவினான். அப்போது நீங்கள் யார் அந்த பெண்ணுக்கு உறவா என்று கேட்டனர்.

இளம்பரிதி    அதற்கு நான் அவளின் நண்பன் என்றான். உள்ளிருந்து அதை கேட்ட அவளின் கண்களில் கண்ணில் சிந்தியது. மருத்துவர்கள் சிகிச்சை செய்து விட்டு வந்து இந்த மருந்துகளை உடனே வாங்கி வருமாறு கூறினர்.அவன் சட்டை பையில் கையை விட்டான் அவனுடைய முதல் மாத சம்பளம் 6000 ருபாய் மட்டுமே இருந்தது. அதை கொண்டு மருந்து வாங்கி வந்தான். அவள் கண்விழிக்கும் வரை அல்லது அவள் பெற்றோர் வரும் வரை இருந்து விட்டு செல்லலாம் என்று காத்திருந்தான்.

அவள் கண் விழித்தாள். அப்பா ,  அம்மா  அவளை கண்ணிருடன் நோக்கினர். அவளின் கண்களோ அவனை தேடியது. 3 நாட்கள் நகர்தன. அவளை  வீட்டிற்கு அழைத்து செல்ல ஆயத்தமானார்கள். மருத்துவமனை வளாகத்தில் அவன் பெயர் கொண்ட கவர் ஒன்று கிடந்தது. அதில் Mr. இளம்பரிதி    6000 என்று எழுதப்பட்டு இருந்தது. அதை கண்டவுடன் அவள் கண்களில் கண்ணீர்  பெருக்கெடுத்தது. என்னுடைய 30,000 பணம் எனக்கு பயன்படவில்லை.
அவனுடைய உதவும் எண்ணமே எனக்கு பயன்பட்டிருகிறது. உண்மையில் அவன் தான்   நன்றாக வாழ பிறந்தவன் அனைவருக்கும் பயன்படும் நல்ல வாழ்க்கை . இளம்பரிதி வீட்டிற்கு சென்றடைந்தான். தெருவில் தன் நண்பனை பார்த்து 2000 ருபாய் கடனாக  தருமாறு கேட்டான். வறுமை அவனை விடாமல்.துரத்துகிறது.................................!   வறுமைக்கு அவன் மீது அவ்வளவு காதல் போல.,............................!  சிந்தியா அவன் மீது காதலில் விழுந்தாள் ...........